Feeds:
Posts
Comments


திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?
ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் :
இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.
4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் :
இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் :
குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.
8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் :
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.
10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக-துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.
– இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.

பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.
பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

புகைப் பிடிக்காத பெண்கள் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் மிகப்பிந்தியே இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். புகைபிடிக்கும் பெண்கள், புகைபிடிக்காத பெண்களைக் காட்டிலும் 14 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர் என ஐரோப்பிய இருதயவியல் ஆராய்ச்சி சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடர்பாக நோர்வே மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

புகைபிடிக்கும் ஆண்கள், புகைபிடிக்காத ஆண்களைக் காட்டிலும் 6 வருடங்கள் முன்பதாகவே மாரடைப்புகளினால் பாதிக்கப்படுகின்றனர்.
“இது ஒரு சிறிய வித்தியாசமில்லை” என்கின்றார், இத்தாலி, பவியாவில் அமைந்துள்ள விஞ்ஞான நிறுவகத்தைச் சேர்ந்த இருதயவியல் தொடர்பான நிபுணர், மருத்துவர் Silvia Priori.மேலும் “பெண்கள் புகைப் பிடிப்பதனால் ஆண்களைக் காட்டிலும் அதிகமானதை இழக்கின்றனர் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றார் ” . மருத்துவர் Silvia Priori தனது கருத்தினை ஆய்வுத் தகவலுடன் ஒப்பிடவில்லை.

நோர்வே,லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் பணி புரியும் மருத்துவர் Morten Grundtvig மற்றும் அவரது குழுவினர் முதற்தடவையாக மாரடைப்பால் பாதிக்கப்பட்டு லில்லிஹம்மேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 1784 நோயாளர்களிடம் பெற்ற தகவல்களை வைத்து தமது ஆய்வினை மேற்கொண்டனர்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம், புகைபிடிக்காத ஆண்களுக்கு,சராசரியாக அவர்களது 72வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகைபிடிக்கும் ஆண்களுக்கு, சராசரியாக அவர்களது 64வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. மேலும் அந்த ஆய்வின் பிரகாரம் புகைபிடிக்காத பெண்களுக்கு,சராசரியாக அவர்களது 81வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. புகைபிடிக்கும் பெண்களுக்கு, சராசரியாக அவர்களது 66வது வயதில் 1வது மாரடைப்பு ஏற்பட்டிருந்தது.

இறுதியாக ஆராய்ச்சியாளர்கள்,மாரடைப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல் மற்றும் நீரிழிவுகள் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு பெண்களுக்கிடையேயான வித்தியாசமாக 14 ஆண்டுகளையும், ஆண்களுக்கிடையேயான வித்தியாசமாக 6 ஆண்டுகளையும் முன்வைத்துள்ளனர்.

முன்னைய ஆய்வுகளின் பிரகாரம்,பொதுவான பால்நிலை வேறுபாடுகள் தொடர்பில் ஒரு உறுதியான முடிவுக்கு வரவில்லை. மருத்துவர்கள், பெண்களில் காணப்படும் ஓமோன்களே அவர்களை இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பதாக நீண்டகாலமாக சந்தேகம் கொண்டிருந்தனர்.

மருத்துவர் Grundtvig கருத்து வெளியிடுகையில், புகைப்பிடிப்பதானது பெண்களுக்கு மொனோபஸினை முன்னதாகவே ஏற்படுத்துகின்றதுடன், மேலும் மாரடைப்பிலிருந்தான சிறியதான பாதுகாப்பும் விலகிவிடுகின்றது என்கின்றார்.
ஆண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது வீழ்ச்சியடையும் அதேவேளை பெண்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கமானது அதிகரித்துச் செல்வதாக ஒப்பிடப்படுகின்றது. மருத்துவர் Grundtvig கருத்து வெளியிடுகையில், பெண்களிடையே இருதய நோய் பாதிப்புக்கள் அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டுகே பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும், அமெரிக்க இருதயவியல் கல்லூரி பேச்சாளருமான மருத்துவர் Robert Harrington கருத்துத் தெரிவிக்கையில் “புகைப்பிடிப்பதானது, பெண்கள் இயற்கையாகவே அவர்கள் கொண்டுள்ள நன்மையானவற்றை அழித்துவிடும்” என்கின்றார்.
இருதயப் பாதிப்புக்கு காரணமான ஏனைய காரணிகளான கொலஸ்ரோல் ஆகியவை பெண்களினை வேறுபாடாகவே பாதிக்கின்றது என்பதனை இதுவரை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவில்லையாம்.

தமது வாழ்வில் புகைப்பிடிக்காதவர்கள் தாமாகவே நோய்களினை நாடிச் செல்லவில்லை என்பதுடன் புகைப்பிடிப்பவர்கள் முன்னதாகவே இளைய வயதில் தமது புகைப்பிடிக்கும் பழக்கங்களைக் கைவிடுவதன் மூலம் கொடிய நோய்களின் பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்புப் பெறலாம் என்பது ம(ற)றைக்க முடியாத உண்மையாகும்.

வழக்கமாக நமது கணினிகளில் பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை கனெக்ட் செய்யும் பொழுது, டாஸ்க் பாரில் “This Device can perform faster” என்ற பலூன் அறிவிப்பு வருவதை கவனிக்கலாம்.
இந்த அறிவிப்பு நாம் ஒவ்வொருமுறையும் பார்க்க வேண்டியுள்ளது. இதற்குமேல் இந்த பலூன் அறிவிப்பு வராமல் தடுக்க என்ன செய்யலாம்.
விண்டோஸ் எக்ஸ்பியில், My Computer ஐ வலது க்ளிக் செய்து Properties செல்லுங்கள். இங்கு Hardware டேபில் உள்ள Device Manager பொத்தானை அழுத்தி Device Manager விண்டோவை திறந்து கொள்ளுங்கள். இதில் உள்ள பட்டியலில் இறுதியாக உள்ள  Universal Serial Bus Controllers என்பதற்கு நேராக உள்ள + குறியை க்ளிக் செய்து, பிறகு USB Host Controller -இல் வலது க்ளிக் செய்து Properties செல்லவும்.
இங்கு Advanced டேபில் “Don’t tell me about USB errors” என்பதை check செய்து விடுங்கள் அவ்வளவுதான்.
விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 -இல், இந்த பலூன் அறிவிப்பு தோன்றும் பொழுது அதன் மீது க்ளிக் செய்தால், This Device Can Perform Faster என்ற விண்டோ திறக்கும். இதில் கீழே உள்ள “Tell me if my device can perform faster” என்பதை Uncheck செய்து விடுங்கள்.